தமிழக முதல்வரும் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் – கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சந்தித்துப் பேசினார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு செய்தார். அதேபோல், மருந்து கிடங்கையும் ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார்.  

தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஹர்ஷ் வர்தன் சந்தித்துப் பேசினார். கொரோனா தடுப்பூசி வினியோகம், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது

 

Translate »
error: Content is protected !!