கூடுதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் 12 அன்று ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவையாக உள்ளது.

இந்நிலையில், சிறப்பு முகாம் நடைபெற இருப்பதால் கூடுதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று தமிழக மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!