கேரளாவில் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு

கேரளாவில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில உயர் கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். எஸ். பிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது,

அக்டோபர் 4 ஆம் தேதி கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்துள்ளோம், சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம். எனினும், கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாலோசித்த பிறகு செப்டம்பர் 10 ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

பள்ளிகள் கல்லூரிகளை திறப்பதற்கு முன்பு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுகிறது.

Translate »
error: Content is protected !!