இந்திய கடற்படை வீரர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு: போலீசார் விசாரணை

இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை ரோந்து செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வர கடல் பகுதியில் இருந்து சுமார் 5 கடல் நாட்டில் கடலுக்குள் கடற்படை ரோந்து கப்பல் சென்று கொண்டிருந்தபோது கப்பலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி டெல்லியை சேர்ந்த குமார் சுபம் என்ற கடற்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை மரைன் போலீசார் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த டெல்லியை சேர்ந்த கடற்படை வீரர் குமார் சுபம் கடற்படையின் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!