நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன், தளபதி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

“அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தும், எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு உடல்வலி, குளிர் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தன. முதல் நாளிலேயே பல அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் படிப்படியாக அந்த அறிகுறிகள் குறைய ஆரம்பித்தன.

தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு செலுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது வைரஸ்களுக்கு எதிராக 85% பாதுகாப்பை அளிக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!