இந்திய பதக்கப்பட்டியலில் முன்னேற்றம்… மணீஷ் நர்வால், சிங்கராஜ் அதனாவுக்கு கமல் ஹாசன் வாழ்த்து

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

சிங்கராஜ் ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களுடன் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,

“பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!