சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

சானியா மிர்சா கூறும்போது, ‘நான் இனி விளையாடப் போவதில்லை. இதற்கு சில காரணங்கள் உள்ளன. முன்பு போல் காயத்தில் இருந்து மீள என் உடல் ஒத்துழைக்கவில்லை. என் உடல் வலிமையை இழக்கத் தொடங்குகிறது.

நான் எங்கு சென்றாலும் எனது மூன்று வயது மகனை என்னுடன் அழைத்துச் செல்வதன் மூலம் அவனுடைய ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். இந்த சீசன் முடியும் வரை விளையாடுவேன். கடின உழைப்பின் மூலம் உடல் எடையை குறைத்து, இளைய தாய்மார்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளேன்,” என்றார்.

Translate »
error: Content is protected !!