சமந்தாவுக்கு திடீர் உடல் நல பாதிப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமாந்த. நேற்று சமந்தா உடல் பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், இது குறித்து தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பு வதந்தியை வெளியிட்டன. சமந்தா கொரோனா பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா குறித்த வதந்திகளை அவரது மேனேஜர் மறுத்துள்ளார். “லேசான இருமல் இருந்தது, அதனால் அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரைப் பற்றிய சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!