திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு தடை..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக வருவதால், கொரோனா பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணி திருவிழாவை வீட்டில் இருந்து Youtube மூலம் காண ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!