கொடைக்கானலில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும் தற்பொழுது கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில், ஏரிச்சாலை, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தில் பைன் செட்டியா மலர்கள்  பூத்துள்ளது. சுற்றுலா  பயணிகளின் கண்களுக்கு  விருந்தளிக்கும் விதமாக உள்ளது. இந்த சிவப்பு நிற  மலர்களை காண சுற்றுலா  பயணிகள்  எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!