ஸ்ரீரங்கத்தில் தமிழக முதலமைச்சர் சாமி தரிசனம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி வருகைதந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் புறநகர் பகுதிகளில்  பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில்  இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஸ்ரீரங்கம் தொகுதி, மணப்பாறை மற்றும் திருவெரும்பூர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

 

முன்னதாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீரங்கம் கோயில் ரங்கா, ரங்கா கோபுரம் முன்பு தமிழக முதல்வருக்கு திருக்கோவில் சார்பில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், நந்து பட்டர், கோவில் அரங்காவல் குழுவினர் தமிழக முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கி, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் மூலவர் ரங்கநாதரையும், ரெங்கநாச்சியார் தாயாரையும் வழிபாடு செய்தார். உடன் அமைச்சர்கள் தங்கமணி, போக்குவரத்து துறை விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வருகை தந்திருந்தனர்.

Translate »
error: Content is protected !!