தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா! குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,245

தமிழகத்தில் இன்று புதிதாக 4,389  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,249 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 40,959 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னை நகரில் இன்று ஒருநாளில் 1,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 3,249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5000க்கும் கீழ் உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,79,191 என்ற நிலையில் சென்னையில் மட்டும் 1,87,852 ஆகும். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  6,27,703; இன்று பலியான 57 பேருடன் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், சென்னை – 1,140, செங்கல்பட்டு – 261, காஞ்சிபுரம் – 130, திருவள்ளூர் – 195, கோவை – 387, கடலூர் – 116, ஈரோடு – 138, நாமக்கல் – 132, சேலம் – 244, திருப்பூர் -147, வேலூரில் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!