கொடைக்கானலில் வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துப்பாக்கிகள் ஏந்தி அதிரடி ரோந்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அவ்வப்போது நக்சல் தடுப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதனடிப்படையில் கொடைக்கானல் மேல்மலை கீழ்மலை மலைப்பகுதிகளில் அதனை ஒட்டியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக 50 க்கும் மேற்பட்ட காவல் நக்சல் தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து வட்டக்கானல் மற்றும் வெள்ளகெவி வனப்பகுதி மற்றும் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துப்பாக்கிகள் ஏந்தி அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் மலைக்கிராம மக்களிடம் வெளி நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!