தக்கலையில் நடந்த நூறு கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு

தமிழ் மாநில சுன்னத்துல் ஜமாத் மாணவர் அமைப்பின் சார்பாக நடைபெற்ற 100 கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு குமரி மாவட்டம் தக்கலை பீரப்பா அரங்கில் வைத்து நடந்தது.

தக்கலை ஞான மாமேதை பீர் முஹம்மது அப்பா அவர்களின் தர்கா ஸியாரத் செய்த பின்னர் மாநாட்டின் நிகழ்ச்சி ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பைச் சார்ந்த ஆலிம்கள் தலைமையில் கஸீதத்துல் புர்தா பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவை அல்ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி முதல்வர் M.தாஜுத்தீன் அஹ்ஸனி தலைமை வகித்தார்கள்.

இந்த சிறப்பு மிக்க மாநாட்டிற்கு குமரி மாவட்ட அரசு காஜி RNK. அபூஸாலிஹ் ஹஸ்ரத் மற்றும் TMJ SSF மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தக்கலை மக்காய்பாளையம் பள்ளி வாசல் இமாம் M.A. அப்துல்லா அன்வரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் M. தாஜுத்தீன் அஹ்ஸனி துவக்கவுரை நிகழ்த்தினார்.

SSF முன்னாள் மாநிலத் தலைவர் M. நிஸாமுத்தீன் அஹ்ஸனி, திருவை ஜீலானிய்யா, பள்ளிவாசல் இமாம் அல்ஹாபிழ் M. அன்சார் ரியாஜி போன்றோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

சென்னை ஜாமிஆ நாஸிருஸ்ஸுன்னா அரபிக் கல்லூரியின் தலைவர் மவ்லவி U. முஹம்மது சலீம் சிராஜி ஹஸ்ரத் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் தற்போதைய மாநில தலைவர் M. கமாலுத்தீன் ஸகாபி அவர்கள் நூறு கோடி ஸலவாத் சமர்ப்பண உரை நிகழ்த்தினார்.

காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் அஸ்ஸெய்யித் S. அப்துல் ரஹ்மான் பாகவி ஃபாழில் அஹ்ஸனி மாநாட்டின் இறுதியில் துஆ ஓதினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து ஜமாஅத் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் குமரிமாவட்ட சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பின் பொதுச்செயலாளர் A. அனஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் அல்ஹாபிழ் M. முஹம்மது அன்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை புரிந்தனர். நிகழ்ச்சியின் தகவல்களை காயல் ஜெஸ்முதீன், சிராஜூத்தீன் அஹ்ஸனீ ஆகியோர் வழங்கினார்கள்.

Translate »
error: Content is protected !!