இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி – மு.க.ஸ்டாலின் டுவிட்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் இன்று. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு,

அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்! என்று முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!