மீண்டும் களமிறங்கும் “வைகைப்புயல்”..!

ரசிகர்களால் “வைகைப் புயல்” என்று அழைக்கப்படும் நகைசுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால் அவரை வேறு புதிய படைகளிலும் ஒப்பந்தம் செய்ய கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதன் காரணமாக அவர் சில வருடங்களாக படங்களில் நடிக்க வில்லை. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் அவர் நடிக்கும் புதிய படத்தை லைக்கா லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சுராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில், வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் வடிவேலு இரண்டு பாடல்கள் பாட போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!